முதலில் மட்டனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அது காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு 3-4 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
பின்பு அது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், சற்று கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டு, ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், அதனைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதித்தும், உப்பு சுவை பார்த்து, உப்பு போதாமல் இருந்தால், அதில் இன்னும் சிறிது உப்பு சேர்த்து கிளறி ஒரு கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி!!!