★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்--திருவப்பூர்
அருள்மிகு முத்துமாரியம்மன் -- திருவப்பூர்,
செல்லும் வழி

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்.

திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் இருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி உண்டு. திருச்சியிலிருந்து -35 கி.மீ. புதுக்கோட்டையிலிருந்து - 18 கி.மீ.

கோயில் பெருமைகள்

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இயங்கி வந்த இக்கோயில், தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இயங்கி வருகின்றது

குழந்தை வரம் வேண்டுவோர், தீராத நோய்கள் நீங்கிட வருவோர், வேலைவாய்ப்புக் கேட்டு வருவோர், குடும்பப் பிரச்சனைகள் தீர்த்திட வேண்டி வருவோர், திருமணம் கைகூட, தடைப்பட்ட திருமணம் நடந்தேற வேண்டுவோர் என அனைவரது குறைகளையும் நீக்கி அருள்மாரி பொழிகின்றாள் அன்னை முத்துமாரி. அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட, அம்பிகையில் அருளால் அம்மைநோய் விரைவில் குணமடையும் என்பது நம்பிக்கை.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள். அருள் வாக்கின்படி, அம்மனின் திருவருவை பூமியிலிருந்து தோண்டி எடுத்து பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்குச் சொந்தமானதாய் இருந்ததால், சமஸ்தானமாக பெரும்புகழோடு விளங்கியது. பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த மன்னரின் மகனுக்கு கடுமையான அம்மை நோய் கண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. மன்னர், முத்துமாரி அம்மன் ஆலயம் வந்து, தனது மகனைக் காப்பாற்றித் தருமாறு மன்றாடினார். ஆனால், விதிப் பயன் காரணமாக அரசரின் மகன் மரணமடைந்தான். மன்னர் ஆத்திரத்திலும் அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அம்பாளை அந்த இடத்தில இருந்த வேறு இடம்மாற்ற உத்தரவிட்டார். அரசரின் ஆணைப்படி, சுவாமி சிலையை வேறு இடம் கொண்டு செல்லுகையில், திருவப்பூர் மக்கள் சிலர் வழிமறித்துக் கெஞ்சி, அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். (அந்த இடம் தற்போது காட்டு மாரியம்மன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது). அன்று இரவு, அரசரின் கனவில் முத்துமாரி தோன்றி, உனது மகன் விதிவசத்தால் உன்னை விட்டுப் பிரிந்தாலும், அவனை எனது மகனாக ஏற்றுக் கொண்டேன் எனக் கூறினாள். தவறை உணர்ந்த மன்னர், அம்மனை முன்பு இருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார்.

சிறப்புகள்

ஆடி வெள்ளி

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள் என்பது சிறப்பு.

Photo Gallery


புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை